சிவசேனாவின் குற்றச்சாட்டு!
Posted on 28/01/2021
பாஜகதான், விவசாயிகள் நடத்தி வரும் வேளாண் போராட்டத்தை களங்கப்படுத்த முயல்கிறது என்றும் சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் சென்று கொடியேற்றிய ஒருபிரிவினர் தீப் சித்து எனும் இளைஞர் தலைமையில் சென்றுள்ளனர். தீப் சித்து என்பவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோரின் பாசறையைச் சேர்ந்தவர் என்று பாஜக மீது சிவசேனா கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது.
பாஜகதான், விவசாயிகள் நடத்தி வரும் வேளாண் போராட்டத்தை களங்கப்படுத்த முயல்கிறது என்றும் சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் டெல்லியில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீலஸார் காயமடைந்தனர்.
விவசாயிகள் தரப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விவசாயிகளில் ஒருதரப்பினர் டெல்லி செங்கோட்டைக்குச் சென்று விவசாயிகளின் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்துக்கு பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடேனா "சாம்னா"வில் டெல்லி வன்முறை குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குற்றம் சாட்டியுள்ளனர்.