ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Posted on 09/12/2020
காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த ரகசிய தகவலையடுத்து, சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் டிக்கென் என்ற பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.