பள்ளிகள் தில்லியில் திறக்கப்பட்டன!
Posted on 05/02/2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தில்லியில் இன்று 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு இன்று (பிப்.5) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா அரசுப் பள்ளி மாணவர்களை நேரில் சென்று சந்தித்தார்.