3 மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்!
Posted on 03/06/2022
சமீபத்தில் மூன்று மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்த நிலையில் அந்த இடைத்தேர்தல் முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன.
இந்த தேர்தல் முடிவுகளின்படி உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர், கேரள மாநில காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர். இது குறித்த விவரத்தை தற்போது பார்ப்போம்.
உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் கேரளா திரிக்கரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் ஒடிசா மாநிலம் ப்ரஜாராஜ் நகர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அலாகா வெற்றி பெற்றுள்ளார்.
Tags: News