புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் சோனாலி பிந்த்ரே!
Posted on 08/12/2018
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை சோனாலி பிந்த்ரே, புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தைப் பொதுவெளியில் முன்வைப்பதன் மூலம் விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திவருகிறார்.
சிகிச்சைக்குப் பின்னர் நாடு திரும்பியிருக்கும் அவரைத் திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டிவருகிறார்கள். புற்றுநோய் பாதிப்புக்குள்ளான சக நடிகை மனீஷா கொய்ராலா, “சோதனையான தருணத்தில் அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறாய்” என்று ட்விட்டரில் வாழ்த்தியிருக்கிறார். உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்திருக்கிறது. கல்லீரல் புற்றுநோயிலிருந்து மீண்டுவருபவர்களின் எண்ணிக்கை
4%-லிருந்து 20% ஆகவும், நுரையீரல் புற்றுநோயிலிருந்து மீண்டுவருபவர்கள் 10%-லிருந்து 20% ஆகவும், கருப்பைப் புற்றுநோயிலிருந்து மீண்டுவருபவர்கள் 14%-லிருந்து 40% ஆகவும், மலக்குடல் புற்றுநோயிலிருந்து மீண்டுவருபவர்கள் 29%-லிருந்து 59% ஆகவும் உயர்ந்திருக்கிறது. புற்றுநோய் பாதிப்புள்ளவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் செய்தி இது.
Tags: News, Hero, Madurai News