மேற்கு வங்க முதல்வர் பா.ஜ.கவைச் சாடினார்!

மேற்கு வங்க முதல்வர் பா.ஜ.கவைச் சாடினார்!

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ந்தேதி எண்ணப்படுகின்றன.

மேற்கு வங்காளத்தின் பாங்குரா நகரில் நடந்த பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த முறை வாக்களித்தவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், ஒவ்வொரு கணக்கிலும் பா.ஜ.க. ரூ.15 லட்சம் பணபரிமாற்றம் செய்ததா?
 
தேர்தலின்போது உங்களுக்கு அரிசி, பருப்பு தருவோம் என பா.ஜ.க-வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு, உங்களுடைய வாக்குகளை வாங்கி சென்று விடுவார்கள் என கூறினார்.
 
பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் வசதியை பாங்குராவில் தனது அரசு செய்து கொடுத்துள்ளது என சுட்டி காட்டி அவர் பேசினார்.
 
அரசு வேலைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு பற்றிய பா.ஜ.க.வின் வாக்குறுதியை குறிப்பிட்டு பேசிய மம்தா, மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்பே எடுத்து விட்டது, என்றார் மம்தா.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top