பாரத் பயோடெக்கின் 2-வது கொரோனா தடுப்பு மருந்து!

பாரத் பயோடெக்கின் 2-வது கொரோனா தடுப்பு மருந்து!

இந்தியாவின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக், கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து ஒன்றையும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நிறுவனம் தயாரித்து உள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து ஆய்வக பரிசோதனையை நிறைவு செய்து, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் முதற்கட்ட ஆய்வுக்கு தயாராகி இருக்கிறது. இந்த பரிசோதனை அடுத்த மாதம் (பிப்ரவரி) மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் என அந்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இந்த தடுப்பு மருந்தின் வினியோக உரிமை பாரத் பயோடெக்கிடமே இருக்கும் எனவும், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா தவிர பிற நாடுகளின் சந்தைகளுக்கு வினியோகிக்க முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top