தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலர் அதிர்ச்சி தகவல்
Posted on 26/04/2022
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரசால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருவதையடுத்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ’தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவு இல்லை என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Tags: News