பிரேமலதா ஆவேசப் பேச்சு!
Posted on 08/02/2021
தே.மு.தி.க., 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுவது பெரிய விஷயம் அல்ல. ஏற்கனவே தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த் நினைத்தால், அவர்களை ஒரு நொடியில் வேட்பாளராக நிறுத்தி, தனித்து போட்டி என்று அறிவித்து விடுவார்.கூட்டணி தர்மத்தை மதித்து, பொறுமை காக்கிறோம்; பொறுமைக்கும் எல்லை உண்டு. இனி நல்லதே நடக்கும்.தே.மு.தி.க.,வின் பலம் அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். தனித்து போட்டி யிட்டால், 10 முதல், 15 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது; அதுதான் உண்மை.