பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக குடும்பங்களை சீரழிக்கிறார் கமல்ஹாசன்! முதல்வர் பழனிசாமி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக குடும்பங்களை சீரழிக்கிறார் கமல்ஹாசன்! முதல்வர் பழனிசாமி

“சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எம்.ஜி.ஆரை கையில் எடுத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான் என ட்வீட் செய்த கமல்ஹாசன், கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க எம்ஜிஆர் நினைத்தார்.
 
அதை செய்ய வேண்டும் என நினைத்ததால் நான் எம்.ஜி.ஆரின் நீட்சி. அதை செய்து முடித்தால் எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான் தான் என்றார்ஜ“ கமல்ஹாசன்.
 
கமல்ஹாசன் எம்.ஜி.ஆரை கையில் எடுத்திருப்பதால் அதிமுக அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளது. அந்ந வரிசையில் இன்று அரியலூரில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல் நாட்டை ஆள நினைத்தால் ஓரு குடும்பம் கூட உருப்படாது என விமர்சித்துள்ளார்.
 
பிக்பாஸ் நிகழச்சியை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது. படங்கள், நாடகங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார் கமல்ஹாசன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top