வீடு தேடி வரும் ரேஷன் கார்டு - குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்!

வீடு தேடி வரும் ரேஷன் கார்டு - குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.

புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
 
தமிழகத்தில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதார்களுக்கு அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ரேஷன் கார்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றியமையாதது ஆகும்.
 
தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு, www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பர். அச்சிடப்பட்ட கார்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
 
அலுவலகங்களில் வேண்டுமென்றே ரேஷன் கார்டு வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
 
அத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம், உணவு வழங்கல் துறை அனுமதி கேட்டது. அதை பரிசீலித்த அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
 
அதன்படி, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, அஞ்சலில் அதை பெற விரும்புவோர், அஞ்சல் கட்டணமாக, 25 ரூபாயை இணையதளம் வாயிலாகவே செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு, 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு, 25 ரூபாய் என, மொத்தம், 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
 
புதிய ரேஷன் கார்டு அச்சிடப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட பயனாளிக்கு அஞ்சல் மூலம் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதனால் கால விரயமும், அலைச்சலும் குறையும்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top