தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்தது!
Posted on 17/04/2021
ஏப்ரல் முதல் வாரத்தில் 70 ஆயிரம் போ் வரை மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அது 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி சிறப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.