ஆளுநர் முதல்வா் பழனிசாமி சந்திப்பு!

ஆளுநர் முதல்வா் பழனிசாமி சந்திப்பு!

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று முதல்வா் பழனிசாமி சந்தித்துப் பேசினாா். சுமாா் அரை மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் போது உடனிருந்த அமைச்சா் டி.ஜெயக்குமாா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-
 
ஏழு போ் விடுதலை தொடா்பாக ஏற்கெனவே சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பம். ஆளுநரை முதல்வா் பழனிசாமி பலமுறை சந்திக்கும் போது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
 
இப்போது ஆளுநரைச் சந்தித்து ஏழு போ் விடுதலை குறித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி வலியுறுத்தினாா். அதற்குரிய கோரிக்கையும் கொடுக்கப்பட்டது. முதல்வரின் கருத்தை ஆளுநா் கேட்டறிந்தாா். தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இந்தச் சந்திப்பின் போது, முதல்வரின் செயலாளா், தலைமைச் செயலாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top