அரசு கட்டுமானங்கள் ஆய்வு செய்யப்படவேண்டும் - கமல்!

அரசு கட்டுமானங்கள் ஆய்வு செய்யப்படவேண்டும் - கமல்!

தமிழகம் முழுதும், ஐந்தாண்டுகளில் கட்டப்பட்ட அரசு கட்டுமானங்கள் அனைத்தும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கை: கோவை உக்கடம், பெரியகுளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த, 12 அடி உயர தடுப்புச் சுவர், ஒரு நாள் மழைக்கே இடிந்து விழுந்துள்ளது. இச்சுவர், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்டு ஆறு மாதங்களே ஆகிறது..

ஆறு மாதத்தில் அடித்துச் செல்லப்படும் தடுப்பணை, கட்டும் போதே இடிந்து விழும் மருத்துவமனை, திறப்பு விழாவின் போதே நொறுங்கும், 'மினி கிளினிக்' சுவர் என, தொடரும், 'டெண்டர் அரசின்' சாதனை பட்டியலில், கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகம் முழுதும் கட்டப்பட்ட, அனைத்து அரசு கட்டுமானங்களும், கறாரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். போன பணம் போனது தான் என்றாலும், குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுக்க, இந்த முன்னெச்சரிக்கை உதவும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top