பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்!
Posted on 23/01/2021
மதபோதகர் பால் தினகரன் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.
தற்போது வருமான வரி சோதனை நிறைவடைந்த நிலையில் அங்கு ரூ.120 கோடி அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முதலீடுகள் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகும்.
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடந்த சோதனையில் அங்கு 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனைக்கு பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் வருமான வரித்துறையினர் கூறினர்.
ரூ.120 கோடி அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் தினகரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.