பெருமைக்குரிய 105 வயதான மாரப்பன்!
Posted on 08/04/2021
1952 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் தவறாது வாக்களித்த பெருமைக்குரியவர் மாரப்பன். கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்பன் 1916 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 1 ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவரது வயது 105. இவரது பிறந்த தேதியை அவரது பெற்றோர்கள் ஓலையில் தமிழில் எழுதி வைத்துள்ளனர்.
விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாக இவர், மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.