தபால் வாக்களிப்பதற்கான விளக்கும்!
Posted on 05/03/2021
தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தபால் வாக்கு வசதி குறித்து கடந்த 4-ந் தேதி, வியாழக்கிழமை கூறியதாவது:
தபால் வாக்கு வசதி உள்ளவா்கள், தமிழக அரசின் முதல் நிலை (கிரேடு ஏ), அல்லது இரண்டாம் நிலை (கிரேடு -பி) நிலை அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்தை (படிவம் 12 டி) அளிக்கலாம். தபால் வாக்கு வசதி பெறுவதற்கு இப்போதே 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை தோ்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டால், அவரது பெயரில் வாக்காளா் பட்டியலில் தபால் வாக்கு வசதி பெற்றுள்ளாா் என குறியீடு செய்யப்படும். அதன்பின், தோ்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக தபால் வாக்கு வசதி பெற்றவா்களிடம் இருந்து வாக்குப் பதிவு செய்த தபால்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் சேகரிக்கப்படும் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.