முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டு மிரட்டலையடுத்து மோப்ப நாய் உதவியுடன் முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் சோதனை நடைபெற்றது. வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில், மிரட்டல் போலியானது என தெரியவந்தது.

சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
 
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  நேற்று தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி , இதனால் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
 
இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் என்பது தெரியவந்தது. மது போதையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top