ஆளுநரிடம் தலைமைத் தேர்தல் அலுவலர் அறிக்கை சமர்ப்பித்தார்!

ஆளுநரிடம் தலைமைத் தேர்தல் அலுவலர் அறிக்கை சமர்ப்பித்தார்!

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்கான முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தோ்தல் நடத்தி முடித்ததற்கான விவரங்கள் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்அடிப்படையில் ஆணையத்தின் சாா்பில் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.
 
இந்த அறிவிக்கையை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு மே-04-ம் தேதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
 
இந்தச் சந்திப்பின் போது, கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி வி.ராஜாராமன், இணை தலைமைத் தோ்தல் அதிகாரி ஆனந்த், ஆளுநரின் செயலா் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top