பரத்துடன் நடிகை வாணி போஜன் இணையும் புதிய படம்
Posted on 12/04/2021
'ராட்சசன்', 'ஓ மை கடவுளே' ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லிபாபு தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் பரத், நடிகை வாணி போஜனுடன் இணைந்து நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் எம். சக்திவேல் இயக்கத்தில், டார்க் திரில்லர் ஜேனரில் தயாராகும் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிகர் பரத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக 'ஓ மை கடவுளே' பட புகழ் நடிகை வாணி போஜன் நடிக்கிறார். இவர்களுடன் மூத்த இயக்குனரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், நடிகை துளசி, நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில், ' தமிழக நகரொன்றின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை ஒன்றை சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொறியாளராக நடிகர் பரத் நடிக்க, அவரது மனைவியாக நடிகை வாணி போஜன் நடிக்கிறார். திரில்லர் படத்தில் ஏதேனும் ஒரு ஒரு அம்சம் மட்டும்தான் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த திரைக்கதையில் குடும்ப பின்னணியிலான திரில்லர் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை கவரும். படத்தின் படப்பிடிப்பு தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.' என்றார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
பாடல்களே இல்லாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.