மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு!
Posted on 08/05/2021
தமிழகத்தில் கொரோனா பரவலால் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்களின் முன்வசதிக்காக இன்று (மே 8) மற்றும் நாளை (மே 9) மட்டும் ஊரடங்கு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், மே 10ம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி காலை 4ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் கீழ்கண்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
* மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை.
* அத்தியாவசிய துறைகளான, தலைமை செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, போலீஸ், ஊர்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
* அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை.
* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு தடை.
* நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
* நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.
* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.
* மே 8 மற்றும் மே 9-ம் தேதிகளில் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* இன்று ( சனி) , நாளை ( ஞாயிறு) அரசு பஸ்கள் 24 மணி நேரம் ஓடும்.