மார்ச் 5-ல் உடன்படிக்கை!
Posted on 03/03/2021
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் முனுசாமி ஆகியோர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு தே.மு.தி.க.வினர் சென்று பேச்சு நடத்தினர்; 23 தொகுதிகள் கேட்டனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் முனுசாமி நேற்று காலை விஜயகாந்த் மைத்துனர் சுதீஷிடம் பேசினார். கூட்டணி பேச்சை தொடர தே.மு.தி.க. முன்வந்தது. 'தொகுதி பங்கீடு முடியும் வரை கூட்டணி குறித்து எந்த கருத்தையும் யாரும் வெளியிட வேண்டாம்' என தே.மு.தி.க.வினருக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே 5ம் தேதி உடன்பாடு கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.