சசிகலா வருகை குறித்து எச்.ராஜா கருத்து
Posted on 09/02/2021
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான அரசில் தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் தமிழகத்துக்கு நெடுஞ்சாலை, மெட்ரோ ரெயில், கடல் பாசி பூங்கா, துறைமுக மேம்பாட்டுக்காக ரூ.2 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
சசிகலா வருகையால் அ.தி.மு.க. ஆட்சிக்கோ, அந்த கட்சியின் செல்வாக்குக்கோ எந்தவித பிரச்சனையும் இல்லை.