திருமலை வைகுண்ட ஏகாதசி ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!

திருமலை வைகுண்ட ஏகாதசி ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டும் ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ₹ 300 சிறப்பு தரிசன முன்பதிவு டிக்கெட் இன்று காலை 6.30 மணியளவில் ஆன்-லைனில் வெளியிடப்படும் எனவும், தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையதள முகவரியான www.tirupatibalaji.ap.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 6.30 மணியளவில் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top