எல்லோருக்கும் இலவச தடுப்பூசி: பிரதமரிடம் சோனியா வலியுறுத்தல்!
Posted on 23/04/2021
காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை, 18 - 45 வயதுடையவர்களுக்கும், இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கடமையிலிருந்து விலகச் சென்றுள்ளது.
இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியை, மத்திய அரசு கைவிட்டு உள்ளது. பொருளாதார சூழ்நிலையை கருதி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். கடந்த ஆண்டில், கடுமையான பாடங்களை கற்றும், மக்கள் அடைந்த வேதனை களை பார்த்த பின்னும், மத்திய அரசு, பாரபட்சமான, தன்னிச்சையான கொள்கையை பின்பற்றுகிறது, என்று கூறியுள்ளார்.