16 வயது சிறுமியின் உயிரை பறித்த ஷவர்மா!

16 வயது சிறுமியின் உயிரை பறித்த ஷவர்மா!

கேரளாவின் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள உணவகத்தில் ‘ஷவர்மா’ வாங்கி சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள உணவகத்தில் கடந்த வெள்ளிகிழமை சிறுமி கெட்டுப்போன அசைவ உணவான ஷவர்மாவை சாப்பிட்டுள்ளார்.

அதேபோல், சக மாணவர்களும் அதை வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.
 
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேவானந்தா (16) என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 18 மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனையடுத்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தியதில், உணவகத்தில் உள்ள ஷவர்மா சாப்பிட்டதால் தான் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top