வாகன ஆவணங்கள் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
Posted on 28/12/2020
ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல், பொது முடக்கம் மற்றும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஏற்கெனவே இதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டு, டிசம்பா் 31-ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு, மோட்டாா் வாகனங்களின் உரிமம், ஓட்டுநா் உரிமம், வாகன பதிவு ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலக் கெடு 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.