கர்நாடகாவில் பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை!

கர்நாடகாவில் பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை!

பெங்களூரு நகர சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்தவர் லட்சுமி. 33 வயதான இவர் கடந்த 2014ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று 2017 முதல் பெங்களூரு சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்றிரவு அவர் பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள நண்பர்கள் வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இரவு உணவுக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற லட்சுமி, சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார்.
 
வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த  நண்பர்கள் கதவை உடைத்து பார்த்தபோது லட்சுமி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த  நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top