பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிக்கிறது - பிரதமர் மோடி!
Posted on 12/12/2020
இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திலும், வருடாந்திர மாநாட்டிலும், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்க உரையாற்றினார்.
அதில் பேசிய பிரதமர் மோடி, “20-20 போட்டியில் நிறைய விஷயங்கள் வேகமாக மாறுவதைக் கண்டோம். ஆனால் 2020 அனைவரையும் குழப்பியது. தேசமும், முழு உலகமும் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் கண்டன. சில வருடங்கள் கழித்து கொரோனா காலத்தைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒருவேளை நாம் அதை நம்ப முடியாது. விஷயங்கள் விரைவாக மேம்படுவது நல்லது.
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தொற்றுநோய் தொடங்கியபோது, நாங்கள் அறியப்படாத எதிரிக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தோம். நிறைய நிச்சயமற்ற நிலைகள் இருந்தன. அது உற்பத்தி, தளவாடங்கள், பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி என்று பல சிக்கல்கள் இருந்தன. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதுதான் கேள்வியாக இருந்தது.
டிசம்பர் மாதத்திற்குள் நிலைமை மாறிவிட்டது. எங்களிடம் தற்போது இதற்கான தெளிவான பதில்கள் உள்ளன. இன்றைய பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிக்கிறது. நெருக்கடியின் போது தேசம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதிர்காலத் தீர்மானங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளன.