மவுனப் பிரசாரம் மேற்கொண்டார் விஜயகாந்த்!
Posted on 25/03/2021
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், திறந்த வேனில் நின்று, கையை மட்டும் அசைத்தபடி ஓட்டு சேகரித்தார். எதுவும் பேசாமல்,மவுனமாக கடந்து சென்ற விஜயகாந்தை கண்ட தொண்டர்கள், 'கேப்டன்... கேப்டன்...' என, உருக்கமாக கோஷமிட்டனர்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் கே.எம்.டில்லி; பொன்னேரி அ.ம.மு.க., வேட்பாளர் பொன்ராஜா ஆகியோரை ஆதரித்து, நேற்று, கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் செய்தார்.
உடல்நிலை சரியில்லாத நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் தொண்டர்கள் மத்தியில், விஜயகாந்த் பிரசாரம் செய்வதால், அவரை காண, ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே குவிந்திருந்தனர்.