போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கற்றறிக்கை!
Posted on 12/03/2021
மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் பணியில் இருக்கக் கூடிய அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதமான உதவிகளையும் செய்யக் கூடாது. அரசியல் கட்சிகளுடன் வாக்கு சேகரிக்க செல்லக் கூடாது. தங்களது வாகனம், வீடுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை பொறிக்க அனுமதிக்கக் கூடாது, வாக்குச்சாவடி முகவர்களாக பணியில் ஈடுபடக் கூடாது.