வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த மத்தியக்குழு!
Posted on 04/02/2021
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் பிப்ரவரி 3-ம் தேதி தமிழகம் வந்த நிலையில் அடுத்த ஒரு தினங்களில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.
விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் ஒரு குழுவினரும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மற்றொரு குழுவினரும் பிப்ரவரி 3-ம் தேதி ஆய்வைத் தொடங்கவுள்ளனர்.
இருநாட்கள் ஆய்வு செய்த பின்னர் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.