டி.டி.வி.தினகரன் அதிமுக-வில் மீண்டும் சேர தேவை மன்னிப்புக் கடிதம்!
Posted on 01/02/2021
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கட்சியில் இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை அவர் சென்ற காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது. அ.தி.மு.க.வில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என முடிவு செய்யப்பட்டு சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை உருவாக்கி செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.