டி.டி.வி.தினகரன் அதிமுக-வில் மீண்டும் சேர தேவை மன்னிப்புக் கடிதம்!

டி.டி.வி.தினகரன் அதிமுக-வில் மீண்டும் சேர தேவை மன்னிப்புக் கடிதம்!

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கட்சியில் இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை அவர் சென்ற காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது. அ.தி.மு.க.வில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என முடிவு செய்யப்பட்டு சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை உருவாக்கி செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

ஆகையால் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். மற்றவர்கள் அவர்களின் சுய நலத்திற்காக கருத்துக்களை கூறுகிறார்கள்.
 
டி.டி.வி. தினகரன் தனிப்பட்ட முறையில் அரசியல் செய்வதற்காக தொடங்கப்பட்டது அ.ம.மு.க.. அப்படிப்பட்ட ஒரு கட்சியை இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை. வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அ.தி.மு.க.வில் இணைக்க கோரினால்அ.தி.மு.க. தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும்.
 
அப்படி பரிசீலனையின் அடிப்படையில் அவரை ஏற்றுக் கொள்வதாக முடிவெடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top