முதல்வர் பழனிசாமி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்!
Posted on 20/04/2021
சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் நேற்று முதல்வர் பழனிசாமிக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் மூன்று நாள்களுக்கு முழு ஓய்வு எடுக்குமாறு முதல்வர் பழனிசாமியை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.