நீட் நுழைவு தேர்வு அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
Posted on 24/08/2017
நீட் நுழைவு தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி போராட்டம் நடக்கவுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சியத் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள்.
இதற்கிடையில் சென்னை அரசு மருத்துவ கல்லுரியில் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காதது வருத்தம் அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
Tags: News, Madurai News, Art and Culture