சுற்றுலா பயணமாக சிறை பிடிக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்!

சுற்றுலா பயணமாக சிறை பிடிக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்!

அமைதியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியான போராட்டம் நடத்திய பின்னர் ஆவேச பன்னீர் செல்வமாக மாறிய சசிகலா மீது சராமரி குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இதன் பின்னர் தமிழக அரசியல் களமே பரபரப்படைந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னால் யாரும் இல்லை எல்லோரும் எங்க பின்னாடிதான் இருக்கிறார்கள் 134 பேர் இருக்கிறார் என்று அவசரமாக பேட்டி கொடுத்தார் தம்பித்துரை.

இந்த நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் நடைபெற்றது. நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் சொகுசு பேருந்து மூலம் பாதுகாப்பாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கேயே காலை உணவு கொடுக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த உடன் மதிய சாப்பாடு அங்கேயே கொடுக்கப்பட்டது. உணவு சாப்பிட்டு உடன் மீண்டும் பேருந்து மூலம் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராயப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகளில் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட உள்ளார்களாம். பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆளுநர் முடிவு எடுக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் சுற்றுப்பயணத்திலேயே இருக்க சசிகலா உத்தரவிட்டுள்ளாராம்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top