ரூ.200 நோட்டுக்கள் நாளை அறிமுகம்!!!
Posted on 24/08/2017
200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நாளை நாடு முழுவதும் புதிய ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.
ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு பரிந்துரையின் படி 200 ரூபாய் மதிப்பு நோட்டுகள் வெளியிடப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. மத்திய அரசின், ஆணையைத் தொடர்ந்து 200 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் மக்களின் புழக்கத்திற்கு வருகிறது.
முன்னதாக புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாக 200 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வர உள்ளன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கம் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Lifestyle, Art and Culture