மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம்!

மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம்!

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேதகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம், ஆனால் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த முடிவும் ஆணையம் எடுக்க கூடாது. மேகதாது குறித்து விவாதிக்கலாமா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறிய விரும்புகிறோம் என குறிப்பிட்டது.
 
மேலும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top