ஷோபியான் மாவட்டத்தில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ஷோபியான் மாவட்டத்தில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இதில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் புட்காம் கிராமம் அருகே பீர்வாவில் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு நேற்று இரவு துப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து மாநில போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய கூட்டுக் குழு அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி வீரமரணம் அடைந்துள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top