ஷோபியான் மாவட்டத்தில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!
Posted on 19/02/2021
ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இதில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் புட்காம் கிராமம் அருகே பீர்வாவில் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு நேற்று இரவு துப்பு கிடைத்துள்ளது.