முப்படை தளபதி பெருமிதம்!
Posted on 08/04/2021
டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பேசியதாவது: நம் நாடு பல தரப்பிலும்பாதுகாப்பு தொடர்பான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சவால்களை நம் அரசியல் தலைமை உறுதியுடன் வெற்றிகரமாக எதிர்கொண்டது. நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை உலக நாடுகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சர்வதேச அளவில் நாம் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வலிமையான தலைமை, பொருளாதார வளர்ச்சி, சமூக ஒற்றுமை,சிறந்த நிர்வாகம் ஆகியவை அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.