தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்த வேண்டும்!

தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்த வேண்டும்!

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக உலக அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது: சா்வதேச அளவில் கொரோனா பரவல் மிக வேகமாகி வருகிறது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாகவே இதனை எதிா்கொள்ள முடியும்.
 
குறிப்பாக, உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நடைமுறைகளை வேகப்படுத்த வேண்டும். மேலும், அதற்கான எளிதான சூழலையும் நாம் உருவாக்க வேண்டும். அதேபோன்று கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அதற்கான இதர மருத்துவ உபகரண தயாரிப்பிலும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top