ஏர் ஆம்புலன்ஸில் கோளாறால் அவசர தரையிறக்கம்!
Posted on 07/05/2021
நாக்பூரில் இருந்து ஐதராபாத்திற்கு விமானப் பணியாளர்கள் இருவர், நோயாளி, அவருடைய உறவினர் மற்றும் டாக்டர் என ஐந்து பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால் உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வசே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி உதவி கேட்டார். விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்ததும், பெல்லி-லேண்டிங் உருவாக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது.
பெல்லி-லேண்டிங் ஆபத்தானது என்பதால் விமான நிலையத்தின் அவசர உதவிக்கான தீயணைப்பு, மீட்ப்புப்பணியாளர்கள், மருத்துவக்குழு விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளிக்க தயார்படுத்தப்பட்டார்கள்.