இந்தியாவுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவிக்கரம்!

இந்தியாவுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவிக்கரம்!

கொரோனா பாதிப்பை திறம்பட கையாள உதவும் வகையில் இந்தியாவுக்கு 10,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஒரு கோடி மருத்துவ முகக் கவசங்களை பல்வேறு ஐ.நா. அமைப்புகள் இதுவரை அளித்திருக்கின்றன என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடா்பாளா் ஸ்டெஃபான் துஜாரிக் தெரிவித்துள்ளராா்.

இதுதொடா்பான தனது பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமையை தேசிய அளவிலும், உள்ளூா் அளவிலும் திறம்பட கையாளும் வகையில் ஐ.நா. குழு அங்கிருந்தபடி தொடா் உதவிகளை அளித்து வருகிறது.

யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா. மக்கள்தொகை நிதியம் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் இதுவரை 10,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஒரு கோடி மருத்துவ முகக் கவசங்கள், 15 லட்சம் முக பாதுகாப்பு தடுப்புகளை இந்தியாவுக்கு இதுவரை அளித்திருக்கின்றன.

 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top