ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச்செல்ல “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்”!
Posted on 19/04/2021
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு முக்கிய பங்கு வகிக்கிறது.பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவ திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே இயக்க உள்ளது.'மஹாராஷ்டிராவுக்கு முதல் கட்டமாக இன்று மருத்துவ திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் எடுத்துச் செல்லப்பட உள்ளன. இன்னும் சில நாட்களில் நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்' என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.