டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கிட உத்தேசம்!
Posted on 15/12/2020
ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க டாடா குழுமம் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. ஒப்பந்தப்புள்ளிகளை சமர்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், அதை டாடா குழுமம் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நூறு விழுக்காடு பங்குகளையும் மத்திய அரசு விற்பதால் அதனை முழுமையாக வாங்க டாடா குழுமம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.