முதலமைச்சரின் வீடு அருகே குண்டு வெடிப்பு - பெரும் பரபரப்பு!

முதலமைச்சரின் வீடு அருகே குண்டு வெடிப்பு - பெரும் பரபரப்பு!

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் பினராயில் முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடு அமைந்துள்ளது. இவரின் வீடு அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி புன்னோஸ் ஹரிதாசன் கொலை வழக்கில் காவல்துறையினர் தேடி வரும் குற்றவாளி நிகில்தாஸ் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, நேற்று முன்தினம் கண்ணூர் காவல்துறையினர் குற்றவாளி நிகில்தாஸ்யையும் அவர் மறைந்திருந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி ரேஷ்மா என்பவரையும் கைது செய்தனர். 
 
இந்நிலையில், நேற்றிரவு குற்றவாளி நிகில்தாஸ் பதுங்கி இருந்த வீடு மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
 
தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top