எதிர்க்கட்சித் தலைவர் பட்னாவிஸின் கருத்து!
Posted on 22/12/2020
மகாராஷ்டிராவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஜெயந்த் பாட்டீலின் கருத்துக்கு பதில் அளித்து பேசியதாவது:-
மகாவிகாஸ் அகாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது, அதில் உள்ள கட்சிகளின் அரசியல் களத்தை குறைத்துவிடும். இது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும்.
ஓரங்கபடப்பட்ட மத்திய பிரதேசம், கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா விரிவடைந்து ஆட்சியை பிடித்தது. மராட்டியத்தில் மற்ற அரசியல் கட்சிகள் நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் பெரிய அளவில் வளர வாய்ப்பை கொடுத்து உள்ளன. நாங்கள் தனித்து ஆட்சியை பிடிப்போம். பல தலைவர்கள் பிற கட்சிகளில் இருந்து பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.