தற்போதில்லை சி.பி.எஸ்.இ., தேர்வுகள்!
Posted on 23/12/2020
கொரோனாவால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது குறித்தும், ஆண்டு தேர்வுகளை நடத்துவது குறித்தும், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நேற்று ஆய்வு செய்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார்;
அப்போது, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது: வழக்கமாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 'பிராக்டிகல்' எனப்படும் செய்முறை தேர்வுகள், ஜனவரி மாதத்திலும், ஆண்டு இறுதித் தேர்வு, பிப்., மாதத்திலும் துவங்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், 2021, ஜன., - பிப்.,ல் தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை.மார்ச்சில் நடத்துவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும், என்றார் அவர்.