மோடி - அமித்ஷாவுக்கு எதிரான டில்லி வழக்கு தள்ளுபடி!

மோடி - அமித்ஷாவுக்கு எதிரான டில்லி வழக்கு தள்ளுபடி!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து அந்த மாநிலம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பிரிவினைவாத அமைப்பான காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி உள்ளிட்ட மூன்று அமைப்புகள் சார்பில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா, லெப்டினன்ட் ஜெனரல் கன்வல்ஜீத் சிங் தில்லான் ஆகியோரிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. தில்லான், தற்போது பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
 
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணிக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், விசாரணைக்கு அந்த அமைப்பினர் ஆஜராகவில்லை. பின்னர் அக்டோபர் 6 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் உத்தரவிடப்பட்டது. அப்போதும் அந்த அமைப்பிலிருந்து யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, வழக்கைத் தள்ளுபடி செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
 
இதையடுத்து, வழக்கு தாக்கல் செய்த தரப்பினர் அடுத்தடுத்த உத்தரவுக்குப் பின்னரும் விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கைத் தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி உத்தரவிட்டார் மாவட்ட நீதிபதி ஆண்ட்ரூ எஸ்.ஹனென்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top