பத்திரிக்கையாளர் கௌரி கொலைக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Posted on 07/09/2017
பெங்களூருவின் மூத்த பத்திரிகையாளரும் சமுக ஆர்வலருமான கௌரி லங்கேஷ் செப்.5 -ம் தேதி முகம் தெரியாத மூவரால் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர் தன் தந்தை தொடங்கிய லங்கேஷ் எனும் பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் இந்துத்துவ ஒழிப்புவாதியாகவும் இருந்து வந்தார். தன்னுடைய கருத்துக்களை யாருக்குமே பயப்படாமல் வெளிப்படையாக கூறுவார்.
இவரின் கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஜாவித் அக்தார், சபானா அஷ்மி, சோனம்கபூர் மற்றும் தியா மிஷ்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்கள். மேலும் இதனை அவர்கள் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது ஏவப்பட்ட தாக்குதல் என்றும் தெரிவித்திருக்கின்றார்கள்.
Tags: News, Hero, Madurai News, Star